Thursday 4 March 2010

விவேக சிந்தாமணி... (கடவுள் வாழ்த்து)

கடவுள் வாழ்த்து
(மூலமும் உரையும்)

“அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற் றிற்பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம் - நல்ல
குணம் அதிக மாம்அருணைக் கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்.”


பொருள் :
திருவண்ணாமலைக் கொபுரத்துள்ளே குடிகொண்டிருக்கும் விநாயகப் பெருமானைக் கரம் கூப்பி வணங்கினால், துன்பங்கள் தொலையும், கொடிய வினைப் பயன்கள் போகும், ஒரு தாயின் வயிற்றில் பிறந்து வந்ததாகிய பிறவித்துயர் நீங்கும், இன்னும் நீங்காமல் எந்தத் துயரம் இருந்தாலும் போகும். இவ்வாறு துன்பங்கள் எல்லாம் விலகி நல்ல நிலை கிடைக்க பெறும்.

குறிப்புரை :

போம் - போகும், தொழுதக்கால் - தொழுதால்( 'கால்' என்னும் எழனுருபு மூன்றாம் வேற்றுமையுருபின் பொருளில் வந்தது ).


Post a Comment

3 comments:

  1. அருமையான பாடல்..
    அருமையான விளக்கமும்..

    ReplyDelete
  2. மிக்க நன்றி தோழா...

    ReplyDelete
  3. my grandpa ask me several time to buy this book.but not available anywhere.now you satisfy that old man.god bless you.

    ReplyDelete