Monday 6 June 2011

உதவியும்!...உயர்வும்!

இங்கிலாந்து நாட்டின் பண்ணையொன்றில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான் ஓர் ஏழைச் சிறுவன்.

அவன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது பக்கத்தில் இருந்த குளத்தில் இருந்து சிறுவனின் ஒருவனின் அலறல் சத்தம் கேட்கவே இடையன் ஓடிப் போய் பார்த்தான். அவன் வயதில் ஒருவன் தண்ணீரில் தத்தளித்த்க் கொண்டிருப்பதைப் பார்த்து நீரில் பாய்ந்து அவனை கரைக்கு இழுத்து வந்தான்.

தன்னைக் காப்பாற்றிய இடையனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் எதாவது செய்ய விரும்பினான் குளத்தில் விழுந்த சிறுவன், அவன் விரும்பும் எதையம் தான் தருவதாகக் கூறினான். இடையனோ தனக்கு படிக்க வேண்டுமென ஆசையிருப்பதாக கூறினான். உடனே அவனும் தன் தந்தையிடம் கூறி இடையனின் படிப்புக்கு ஏற்பாடு செய்தான்.

அந்த இடையன் தான் உலகப்புகழ் பெற்ற அலெக்சாண்டர் ஃப்ளெம்மிங், குளத்தில் விழுந்த பணக்கார சிறுவன்தான் பின்னாளில் இங்கிலாந்தின் பிரதமராயிருந்த வின்ஸ்டண்ட் சர்ச்சில்.