Sunday 14 March 2010

விவேக சிந்தாமணி - 03

குக்கலின் இயல்பும் மக்களின் இயல்பும்.


"குக்கலைப் பிடித்து நாவிக்
கூண்டினில் அடைத்து வைத்து
மிக்கதோர் மஞ்சள் பூசி
மிகுமணம் செய்தா லும்தான்
அக்குலம் வேற தாமோ?
அதனிடம் புனுகு உண்டாமோ?
குக்கலே குக்க லல்லால்
குலந்தனில் பெரிய தாமோ?"


பொருள் :-

நாயைப் பிடித்துவந்து புனுகுப் பூனையின் கூட்டில் அடைத்துவைத்து, மிகுதியான ஒப்பற்ற மஞ்சளைப் பூசி, மிகநறுமணம் கமழும்படி செய்த போதும். அந்த நாய் அதனுடைய குலத்தில் இருந்து வேறு பட்டதாகுமா? ( ஆகாது ). அந்த நாயிடம் புனுகு உண்டாகுமோ? ( உண்டாகாது ). என்ன செய்தாலும் நாய் நாயாகவே இருக்குமே தவிர அது குலத்தில் பெரியதாக ஆகிவிடுமோ? ( ஆகாது ).

குறிப்புரை :-

குக்கல் - நாய், நாவி - புனுகுப் பூனை.


Post a Comment

2 comments:

  1. தீயோர்கள் திருந்துவது குறைவு..

    ReplyDelete
  2. மிக்க நன்றி... அண்ணாமலை..!!

    ReplyDelete