Monday 19 April 2010

விவேக சிந்தாமணி - 06

பொருளிருந்தால் போருந்தியிருப்பர்.

"ஆலிலை பூவும் காயும்
அளிதரும் பழமும் உண்டேல்
சாலவே பட்சி எல்லாம்
தம்குடி என்றே வாழும்
வாலிபர் வந்து தேடி
வந்திப்பர் கோடா கோடி
ஆலிலை ஆதிபோனால்
அங்குவந்திருப்பர் உண்டோ?"


பொருள் :-

ஆலமரத்தில் இலை காய் கனி ஆகியவை இருந்தால் மிகுதியான பறவைகள் அம்மரத்தில் குடியிருக்கும் , அதே ஆலமரம் பட்டுப் போய் விட்டால் அம்மரத்தில் எந்தப் பறவையும் வந்து தங்காது, அது போல பெரும் செல்வம் பெற்றிருப்போரை தேடி ஏராளமானோர் வருவர், அதே செல்வந்தர்கள் வறுமைப் பட்டால் அவர்களைத் தேடி வருபவர் யாரும் உண்டோ?

Friday 2 April 2010

விவேக சிந்தாமணி - 05.

"கதிர்பெறு செந்நெல்வாடக்
கார்க்குலம் கண்டு சென்று
கொதிநிரைக் கடலில் பெய்யும்
கொள்கைபோல் குவலயத்தே
மதிதனம் படைத்த பேர்கள்
வாடினோர் முகத்தைப் பாரார்
நிதிமிகப் படைத்தோர்க் கீவார்
நிலை இலார்க்கு ஈயமாட்டார்."



பொருள் :-

கதிர்களை யுடைய செந்நெற் பயிர்கள் நீரில்லாமல் வடிக் கொண்டிருக்க மேகக் கூட்டமானது அதைக் கண்ட போதும் அந்த இடத்தில் மழையைப் பெய்யாமல் ஆர்ப்பரிக்கும் அலைகளைக் கொண்ட கடலிலே பெய்தாற் போல, உலகத்தார்கள் மதிக்கும் அளவு அதிக செல்வம் பெற்ற செல்வந்தர்கள், வறுமையால் வாடுபர்களுக்கு உதவிடாமல், செல்வம் உள்ளவருக்கே கொடுக்கிறார்களாம்.

குறிப்புரை :-


மதிதனம் - வினைத்தொகை.