Wednesday 27 April 2011

பணிவு..


மண்ணை நோக்கிக் குனிந்திருந்தது தெருவிளக்கு.

"இந்தத் தெருவிளக்குக் கோழையாய் கைகட்டிக் குனிந்து நிற்பதைப் பார்த்தால் வெட்கமாக இல்லையா" என்றது காக்கை.

நீண்ட காலமாக தெருவின் ஓரத்திலேயே நின்ற தென்னைக்குக் கோபம் வந்துடவிட்டது.

"கூர்ந்து கவனி, தெருவில் ஒளியைப் பாய்ச்சித் தொண்டாற்றிக் கொண்டே பெருமையால் தலைவீங்கிப் போகாமல் அடக்கத்தோடு நிற்கிறது தெருவிளக்கு"

என்ற தென்னை,

மீண்டும் "புரிகிறதா" என்ற தொனியில் காக்கையைப் பார்த்துவிட்டு, பிறகு அது சொன்னது...

"பணிவு வேறு
குனிவு வேறு"



Post a Comment

6 comments:

  1. அருமை... நன்றாக உள்ளது தோழி...

    ReplyDelete
  2. பணிவு சூப்பர்...அடுத்து துணிவுக்கு ரெடி பண்ணுங்க...

    ReplyDelete
  3. கடுகு சிறியது அதற்க்கு கரம் இருக்கும் அது போல் பணிவு குனிவு என்ற இரண்டு வார்த்தைக்கு எவளோ பெரிய விளக்கம்.திறமையானவர்கள் எதை செய்தாலும்சிறப்பாக செயமுடியும்என்று கட்டி விட்டே,நன்றி வாழ்க வளமுடன்
    subburajpiramu@gmail.com

    ReplyDelete
  4. அடுத்தவரை கரைபடுத்துவது மட்டுமே செய்யும் காக்கைகள் இதைதவிர என்ன சொல்ல முடியும் ? தென்னையின் பதிலால், திமிரான காக்கைக்கு வந்தது தலைக்குனிவு !!

    ReplyDelete
  5. நல்லாருக்கு!

    ReplyDelete
  6. Unmai , eppo neraya perukku, panivukkum , gunivukkum vidhiyasam teriala...!!!

    naan terinjikka try pannittu eirukken!!!

    ReplyDelete