Friday 18 June 2010

விவேக சிந்தாமணி - 10.

சேரும் இடத்தை பொறுத்தே சிறப்பு...

"கற்பகத் தருவைச் சார்ந்த காகமும் அமுதம் உண்ணும்
விற்பன விவேகம் உள்ள வேந்தரைச் சேர்ந்தோர் வாழ்வார்
இப்புவி தன்னில் என்றும் இலவு காத்திடும் கிளிபோல்
அற்பரைச் சேர்ந்தோர் வாழ்வது அரிதரிதாகும் அம்மா"

பொருள் :-

நினைத்ததெல்லாம் தரக்கூடிய கற்பக மரத்தில் போய் இருந்த காகத்துக்கும் அது நினைத்தால் அமுதத்தையும் உண்ணக் கூடியதாக இருக்கும். அது போல கல்வி அறிவில் வேந்தர் போல இருக்கும் நல்லோரை நாடி இருப்போர்க்கு நன்மையே விளையும். இதே போல விவேகமற்ற மூடரை சார்ந்திருப்போருக்கு இலவுகாத்த கிளி போல என்றும் நல்வாழ்வு கிட்டாது என்பது இதன் பொருள்.



Post a Comment

2 comments:

  1. உங்கள் வலை பக்கம் அழகாக உள்ளது . வாழ்த்துக்கள்

    ReplyDelete