Thursday 17 June 2010

விவேக சிந்தாமணி - 08.

தவளையின் குணமும் மடையர்கள் இயல்பும்


"தண்டா மரையின் உடன் பிறந்தும்
தன்தேன் நுகரா மண்டுகம்;
வண்டோ கானத்து இடையிருந்து
வந்தே கமல மதுஉண்ணும்!
பண்டே பழகி இருந்தாலும்
அறியார் புல்லோர் நல்லோரை
கண்டே களித்து இங்கு உறவாடி
தமிமில் கலப்பார் கற்றோரே!''

பொருள் :-

குளிர்ந்த தாமரையில் சுரந்திருக்கும் சுவையான தேனின் அருமையினை அதே தடாகத்தில் வசிக்கும் தவளை அறியாது. ஆனால் எங்கோ காட்டிலிருக்கு வண்டானது தேடி வந்து தாமரையின் தேனை பருகி மகிழும்.இதைப் போலவே அறிவற்றவர்கள், தங்களுடன் பழகிவரும் நல்லோரின் சிறப்பினை உணர்ந்திருக்க மாட்டார்கள். ஆனால் கற்றறிந்தவர்கள் நல்லோரை தேடி இனம் கண்டு அவரோடு நட்பு பூண்டு அவர்களோடு இனைந்திருப்பர்... என்றும் சிறந்திருப்பர் என்பது இதன் பொருள்.





Post a Comment

No comments:

Post a Comment